தக்காளியை இரும்பு வாணலியில் வேக வைத்து…

Tuesday, September 7, 2010


காய்கறி விலை எக்கச்சக்கமாய், “எகிறி’ விட்டாலும், அதைச் சாப்பிடாமல் தவிர்த்தால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் குறையும்.

காய்கறியிலிருந்து கூடுதல் சத்தைப் பெற, சில எளிய வழிகள்:

இதய பாதுகாப்பு:

லைக்கோபீன் அதிகம் நிறைந்த தக்காளியை சூடுபடுத்தினால் ஏற்படும் ரசாயன மாற்றத்தால், இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் சத்துக்களை உடல் எளிதாக கிரகித்து கொள்ளுகிறது. எனவே சமையலில் தக்காளியை பயன்படுத்துவது இதய பாதுகாப்புக்கு சிறந்தது.

* புற்றுநோய் பாதுகாப்பை அதிகரித்தல்:

அதிகளவு சூடுபடுத்தும் போது பூண்டில் காணப்படும் புற்றுநோயை எதிர்க்கும் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்சைமான அலினேஸ் அழிந்து விடுகிறது. எனவே, பூண்டை நறுக்கியதும் அவற்றை 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின் சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். இதனால், பூண்டில் சூட்டினால் உண்டாகும் சேதத்தை தடுக்கும் காரணி உற்பத்தியாகிறது.

* ஆன்டி-ஆக்சிடன்ட்களை இரட்டிப்பாக்குதல்:

சாலட்களில் மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோயை எதிர்க்கும் காரணிகள் இரட்டிப்பாகும்.மேலும், இஞ்சி, மல்லித்தழை, புதினா மற்றும் சீரகம் ஆகியவை உடலுக்கு கிடைக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் சதவீதத்தை அதிகப்படுத்துகின்றன.

* கண்கள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துதல்:

பருப்புகள், ஆலிவ் அல்லது பிற கொழுப்பு நிறைந்த பொருட்களை சிவப்பு, பச்சை, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ண காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால், கொழுப்பில் கரையும் வைட்டமின்களான, ஏ, இ மற்றும் கே ஆகியவற்றின் அளவு அதிகரிக்கும். இந்த சத்துக்கள் பார்வைதிறன் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு திறன் ஆகியவற்றை அதிகரிப்பதோடு, ஸ்ட்ரோக் மற்றும் எலும்புத்தேய்வு போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கிறது.

* கால்சியம் சத்தை அதிகம் பெற:

வீட்டிலேயே சிக்கன் சூப் செய்யும் போது அத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, வினிகர் மற்றும் தக்காளி போன்றவற்றை சேர்த்து செய்யலாம். அமிலத்தன்மை உடைய இந்த கலவை சிக்கன் எலும்புடன் சேரும் போது சூப்பின் கால்சியம் சத்து உயர்த்துகிறது.

* உடலுக்கு கேடு விளைவிக்கும் காரணிகளை அகற்ற:

கோழி இறைச்சியை சுத்தம் செய்து பூண்டு, சிடர் வினிகர், எலுமிச்சை சாறு அல்லது தயிரில் சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் சமைக்கும் போது அதில் உள்ள உடலுக்கு ஊறு விளைவிக்கும் காரணிகள் நீங்கி விடும்.

* காய்ச்சல், ஜலதோஷத்திற்கு எதிரான எதிர்ப்பு சக்தி கிடைக்க:

காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை சிறிதாக நறுக்கினால் பார்க்க நன்றாக இருக்கும். ஆனால், அவற்றில் உள்ள சத்துக்கள் அழிந்து விடுகின்றன. காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை, பெரிய துண்டுகளாக நறுக்கும் போது அதில் உள்ள சத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றன. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி, அதிகளவில் கிடைக்கும்.

* முக்கிய சத்துக்களை முழுவதுமாக பெற:

ஆப்பிள், உருளைக்கிழங்கு மற்றும் கத்தரிக்காய் போன்றவற்றின் தோலை உரிக்காமல் சாப்பிடுவதன் மூலம் சில முக்கிய சத்துக்களை அப்படியே பெற முடியும். பெரும்பாலான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் வெளித் தோல்களிலேயே காணப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கின் தோலில் அதிகளவு நார்ச் சத்து நிறைந்துள்ளது.

* 10 மடங்கு இரும்பு சத்து கிடைக்க: அமிலம் நிறைந்த உணவுகளான தக்காளி, எலுமிச்சை போன்றவற்றை இரும்பு பாத்திரங்களில் சமைத்தால், நமது உடல் கிரகிக்கும் இரும்பு சத்தின் அளவு அதிகரிக்கும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Free counters!
Protected by Copyscape Online Plagiarism Detector