MUTTON BRIYANI

Tuesday, October 12, 2010

தேவையானவை:
  • மட்டன் - அரை கிலோ, 
  • பாசுமதி அரிசி - இரண்டரை கப், 
  • பெரிய வெங்காயம் - 3, 
  • தக்காளி - 4, 
  • பச்சை மிளகாய் - 6, 
  • மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், 
  • எண்ணெய் - அரை கப், 
  • நெய் - கால் கப், 
  • புதினா - ஒரு கைப்பிடி, 
  • மல்லித்தழை - ஒரு கைப்பிடி, 
  • தயிர் - ஒரு கப், 
  • உப்பு - 2 டீஸ்பூன். 
  • இஞ்சி+பூண்டு விழுது - 4 டீஸ்பூன். 
  • அரைக்க: பட்டை - 2, 
  • ஏலக்காய் - 10, 
  • கிராம்பு - 2.


செய்முறை:
அரிசியைக் கழுவி, தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவையுங்கள். பெரிய வெங்காயம், தக்காளியை நீளம், நீளமாக நறுக்குங்கள். பெரிய வெங்காயம், தக்காளியை நீளம், நீளமாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்தெடுங்கள்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, நெய் விட்டு மட்டன், புதினா சேர்த்து தண்ணீர் சுண்ட சுண்ட வதக்குங்கள். பிறகு இஞ்சி, பூண்டு விழுதையும் அரைத்த மசாலாவையும் போட்டு, தக்காளி, தயிர், மிளகாய்தூள், உப்பு போட்டுக் கிளறி, மட்டன் வேகும் வரை வேகவிடுங்கள்.
மட்டன் நன்றாக வெந்தபிறகு வென்னீர் 2 டம்ளர் விட்டு, அது நன்றாக கொதிக்கும்போது அரிசியை போட்டுக் கிளறுங்கள். மேலே நிற்கும் தண்ணீர் வற்றி, சாதம் சேர்ந்தாற்போல (உப்புமா போல தளதளவென்ற பதத்தில்) வரும் சமயத்தில் தீயை "ஸிம்"மில் வைத்து பிரியாணி பாத்திரத்தை மூடுங்கள். அதன் மேலே வெயிட்டான பொருளைத் தூக்கி வைத்து "தம்" போடுங்கள். ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் வென்னீரை நிரப்பி, பிரியாணி பாத்திரத்தை மூடியிருக்கும் தட்டு மேலே வைத்தும் "தம்" போடலாம்.

உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு  பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... 
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்

Thanks for visit



MUSHROOM BIRIYANI SPL


அசைவம் விரும்புகிறவங்களும் விரும்பாதவங்களும் கூட காளானை விட்டு வைக்க மாட்டாங்க. ஏன்னா, அம்புட்டு ருசி. ருசி மட்டுமல்லாமல் புரதச்சத்தும் நிறைய இருப்பதுதான் இயற்கை நமக்களித்த கொடை. இந்த சத்தான சுவையான காளான் பிரியாணியை ஈஸியா செஞ்சிடலாம்னா.. யாருக்குத்தான் பிடிக்காது. சட்டுபுட்டுன்னு சமைச்சு விருந்தாளிகளை அசத்திப்புடலாம்ல.... 

தேவையான பொருட்கள்:
  • மஷ்ரூம் எனப்படும் காளான் நல்ல வெள்ளையாக உள்ளது - 200 கிராம்
  • பாசுமதி அரிசி - 200 கிராம்
  • முந்திரிப்பருப்பு - 10
  • பிஸ்தா பருப்பு - 10
  • குடமிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்).
  • இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
  • பூண்டு பேஸ்ட்  1 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
  • அஜினமோட்டா - 1 சிறிய பாக்கெட்
  • தேங்காய்ப்பால் - 100 மி.லி.,
  • நெய் - 25 மி.லி.,
  • மல்லித்தழை நறுக்கியது - 1 கப்
  • மிளகுத்தூள் - 1 டீ ஸ்பூன்
  • வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
* பாசுமதி அரிசி ஒரு மடங்குக்கு தேங்காய்ப்பால் + தண்­ணீர் சேர்த்து இருபங்கு விட்டு குக்கரில் இரண்டு விசில் வரவிட்டு இறக்கவும்.
* வாணலியில் நெய்விட்டு வெங்காயம், குடமிளகாய், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், உப்பு, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
* சாதத்துடன் வதக்கியதைப் போட்டு வதக்கவும்.
* சாதத்துடன் வதக்கியதைப் போட்டு அஜினமோட்டா, சோயாசாஸ், மிளகுத்தூள் சேர்க்கவும். நெய்யில் முந்திரி, பிஸ்தா வறுத்துப் போடவும்.
* மஷ்ரூமை நான்கு துண்டுகளாக நறுக்கி இளம்சூடான தண்ணீ­ரில் உப்பு போட்டு ஐந்து நிமிடம் வைத்து தண்­ணீர் வடித்து எடுக்கவும்.
* இதனை நெய்விட்டு வதக்கி சாதத்துடன் கலக்கவும். காளானில் புரதச்சத்து நிறைய உள்ளது.


உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு  பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... 
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்
Thanks for visit

CHICKEN BRIYANI

Monday, October 11, 2010


தேவையானவை:
  •  சிக்கன் - அரை கிலோ
  • பாசுமதி அரிசி - இரண்டரை கப்
  • தேங்காய்ப்பால் - 2 கப்
  • தயிர் - அரை கப்
  • எலுமிச்சம்பழம் - சிறியதாக ஒன்று
  • இஞ்சி+பூண்டு விழுது - 4 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 6
  • மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
  • புதினா
  • மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி
  • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
  • உப்பு - 2 டீஸ்பூன்
(இதற்கு தக்காளி தேவையில்லை)


செய்முறை:
 சிக்கனைக் கழுவி, சுத்தம் செய்து, இஞ்சி, பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய், தயிர், மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, பொடியாக நறுக்கிய புதினா, மல்லித்தழை ஆகியவற்றுடன் சேர்த்துப் பிசறி ஒரு மணிநேரம் ஊற விடுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்றாக வதக்குங்கள். பிறகு, நெய் விட்டு, பிசறிய கோழி கலவையை நன்றாக எண்ணெய் கசிந்து, தண்ணீர் சுண்டும் வரை வதக்கி தேங்காய்ப்பால் சேருங்கள். கொதிவந்தவுடன் அரிசியை போடுங்கள். எலுமிச்சம்பழச் சாறை அத்துடன் கலந்து, ஒரு கொதிவந்தவுடன் குக்கரை மூடி, வெயிட் போட்டு ஒரு விசில் வந்தவுடன் "ஸிம்"மில் 5 நிமிடம் வைத்து இறக்கி சுட சுட பரிமாறுங்கள்.



ங்கள் கருத்துக்களை  பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு  பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... 
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன் 


Thanks for visit
Free counters!
Protected by Copyscape Online Plagiarism Detector
 
INKU VARUKAITHANTHA ANAIVARUKUM EN MANAMARNTHA _/\_NANRI_/\_ MENDUM VARUKA..  இங்கு வருகைதந்த அனைவர்க்கும் என் மனமார்ந்த _/\_ நன்றி_/\_ மீண்டும் வருக..