முகத்தில் கரும்புள்ளிகளா கவலை வேண்டாம்

Monday, September 6, 2010


முகத்தில் மாசு, மறு, கரும்புள்ளி என்று எதுவும் இல்லாமல் இருந் தாலே முகம் பளபளக்கும். ஒரு வேளை முகப்பருவோ, கரு வளையமோ வந்து விட்டால் அவற்றை எப்படிச் சரி செய்வது? அல்லது தற்காலிகமாக மேக்கப் மூலம் எப்படி மறைப்பது என்று பார்ப்போமா... முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால்...

உங்களுடைய சருமம் ரொம்பவே எண்ணெய்த்தன்மையாக இருந்தால், இந்தக் கரும்புள்ளிகள் அழைக்காமலேயே உங்கள் முகத்தில் வந்து விடும். எப்படிச் சரி செய்வது? ஐஸ் கட்டியை சுத்தமான கைக்குட்டையில் சுற்றி, அதைக் கொண்டு முகத்தை ஒற்றி யெடுங்கள். இப்படிச் செய்தால் முகத்தில் வழி யும் எண்ணெய், கட்டுப்பாட்டில் வரும். சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை தேனுடன் பிசைந்து கரும்புள்ளிகள் மீது தடவி வரவும். லேவண்டர் ஒயிலை தொடர்ந்து அப்ளை செய்து வந்தாலும் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

எப்படி மறைப்பது?

கன்சீலரை சற்று அதிகமாக எடுத்து பிரஷ் ஷின் மூலமாக முகத்தில் தடவி அதன் மீது ட்ரான்ஸுலின்ட் பவுடரை அப்ளை செய்தால், முகத்தில் கரும்புள்ளிகள் இருப்பதே தெரி யாது.

முகத்தில் முகப்பரு மற்றும்

தழும்பு இருந்தால்...


முகப்பருவே ஒரு தொல்லை என்றால், அதைவிட பெருந்தொல்லை அதைக் கிள்ளி விட்டால் வரும் தழும்பு. எப்படிச் சரி செய்வது?

உங்களுடையது எண் ணெய்ப் பசை சருமம் என் றால் தக்காளி ஜூஸ், வெள் ளரி ஜூஸ், தர்பூசணி ஜூஸ் மூன்றிலும் தலா ஒரு டீஸ் பூன் எடுத்துக் கலந்து அதை முகத்தில் தடவி வந்தால், முகப்பருவும் சரியாகிவிடும். அதைக் கிள்ளினால் வரும் தழும்பும் சரியாகிவிடும். உங்களுடையது நோர்மல் சருமம் என்றால் ஒரு டீஸ் பூன் தர்பூசணி ஜூஸ், 4 டீஸ் பூன் ஓட்ஸ் பவுடர், ஒரு டீஸ் பூன் லெமன் ஜூஸ், ஒரு டீஸ்பூன் ஓரேஞ் ஜூஸ் நான் கையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி வாருங்கள் போதும். எப்படி மறைப்பது?

இதற்கும் கன்சீலரை கொஞ்சம் அதிகமாக அப்ளை செய்து, அதன் மீது பிரஷ்ஷால் லேசாக டிரான் ஸுலின்ட் பவுடரை டச் செய்யுங்கள். தழும்பு சற்று ஆழமாக இருந்தால் தொடர்ந்து பேஷியல், ஸ்கிரப்பிங் என்று சரியான இடைவெளியில் செய்து வாருங்கள். முகத்தில் லேசான தீக்காயம் இருந்தால்...

முகத்தில் லேசான தீக்காயம் ஏற்பட்டால், அதற்கு உங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே பெஸ்ட் தீர்வு இருக்கிறது. எப்படிச் சரி செய்வது?

சோற்றுக் கற்றாளையைக் கீறி, அந்த ஜெல்லை அப்படியே தீக்காயத்தின் மீது தடவி வாருங்கள். லேவண்டர் ஒயிலைத் தொடர்ந்து தடவி வந்தால் தீக்காயம் எங்கே என்று தேடி னாலும் கிடைக்காது. தீக்காயத்தினால் ஏற்பட்ட தழும்பு மறைய வேண்டுமென்றால் விட்டமின் ஈ' ஒயிலை அதன் மீது தொடர்ந்து தடவுங்கள். எப்படி மறைப்பது?

இதற்கும் பிரஷ்ஷினால் கன்சீலரை அப்ளை செய்து, அதன் மீது பவுடரை ஸ்பொன்ஜால் தொட்டுத் தடவுங்கள்! உப்பிய கண்களோ, கருவளையமோ இருந்தால்...

எத்தனை அழகான கண்களும் வீங்கி இருந் தாலோ, அதைச் சுற்றி கருவளையம் இருந் தாலோ எடுபடாமல் போய்விடும். எப்படிச் சரி செய்வது?

நேரத்திற்குத் தூங்கினால் கண்கள் வீங்காது. தவிர உருளைக் கிழங்கு மற்றும் வெள் ளரிக்காயை வட்டமாக சீவி அதை கண்களின் மீது 10 நிமிடம் வைத்தால் வீக்கம் மற்றும் கருவளையம் இரண்டுமே சரியாகிவிடும்.

எப்படி மறைப்பது?

உங்கள் ஒரிஜனல் ஸ்கின் கலரை விட லைட் கலரில் கன்சீலரை கண்களைச் சுற்றியுள்ள கரு வளையத்தின் மீது தடவி அதன் மீது உங்க ளின் ஸ்கின் கலர் பவுடர் பவுன்டேஷனை அப்ளை செய்யுங்கள்.

கண்களைச் சுற்றி சுருக்கம் விழுந்தால்...

சட்டென்று வயதைக் கூட்டிக் காட்டிவிடும். இந்தப் பிரச்சினைக்கு என்ன செய்யலாம்?

எப்படிச் சரி செய்வது?

சுருக்கம் உள்ள பகுதிகளில் விட்டமின் ஈ' ஒயிலையோ அல்லது பாதாம் ஒயிலையோ தடவி மென்மையாக மசாஜ் செய்துவிட்டு, பிறகு குளிர்ந்த நீரை கண்கள் மீது மெதுவாக வாரி அடியுங்கள்.

எப்படி மறைப்பது?

மை வைக்கும் இடத்தில் தரமான ஐ ஜெல்' லைத் தடவி பத்து நிமிடம் கழித்து பவுன் டேஷனை அப்ளை செய்யுங்கள். சுருக்கம் தெரியாது.

0 கருத்துரைகள்:

Post a Comment

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Free counters!
Protected by Copyscape Online Plagiarism Detector